×

அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சன்னி தியோலின் பங்களா ஏலம் ரத்து

மும்பை: சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்படும் என்று வங்கி நிர்வாகம் அறிவித்த நிலையில், தற்போது ஏலம் அறிவிப்பு உத்தரவை ரத்து செய்வதாக வங்கி அறிவித்துள்ளது. பாலிவுட் நடிகரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சன்னி தியோலுக்குச் சொந்தமான பங்களாவை ஏலம் விடுவதற்கான பொது அறிவிப்பை வங்கி ஒன்று அறிவிப்பை வெளியிட்டது. கிட்டத்தட்ட ரூ.56 கோடி வரி பாக்கியை செலுத்தாததால், பங்களாவை ஏலம் விடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘செப்டம்பர் 25ம் தேதி மும்பை நகரின் ஜூஹு பகுதியில் ‘சன்னி வில்லா’ என்ற பங்களா ஆன்லைன் மூலம் ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பானது தொழில்நுட்ப காரணத்தால் ஏற்பட்ட பிரச்னையால் திரும்பப் பெறப்படுகிறது’ என்று கூறியுள்ளது.

The post அறிவிப்பு வெளியிட்ட நிலையில் சன்னி தியோலின் பங்களா ஏலம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Sunny Deol ,Mumbai ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்